search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை எப்.சி"

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய மும்பை அணி வீரர்களில் 27-வது நிமிடத்தில் ராய்னியர் பெர்னாண்டஸ், 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர். பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் (53 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (14 முறை) சென்னை அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை.

    முடிவில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மும்பை அணி 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதே சமயம் ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று வெறும் 5 புள்ளி மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள சென்னை அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை ஏமாற்றத்துடன் தொடங்கி உள்ள சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
    பெங்களூரு:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.



    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது. இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. 19-வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா பந்துடன் இலக்கை வெகுவாக நெருங்கினார். அவர் தைரியமாக வலையை நோக்கி பந்தை உதைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கம்பம் அருகில் நின்ற சக வீரர் ஜெர்மன்பிரீத்சிங் நோக்கி அடிக்க, பந்து வெளியே ஓடி வாய்ப்பு வீணானது. இதே போல் 33-வது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பையும் லால்பெகுலா நழுவ விட்டார்.

    41-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. சக வீரர் ஸிஸ்கோ தட்டிக்கொடுத்த பந்தை, மிகு சூப்பராக அடித்து கோலாக்கினார். இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பெங்களூரு அணி அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

    பந்து அதிக நேரம் (56 சதவீதம்) சென்னை வீரர்கள் வசமே சுற்றிக்கொண்டிருந்தது. ஷாட்டுகள் அடிப்பதிலும் எதிரணியை விட (9 முறை) சென்னையின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது.

    கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி- கோவா அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
    ×